அறிவார்ந்த நண்பர்களே!
மேடம் ஜெ.அவர்களுக்கு உச்ச நீதிமன்றம் வழங்கி இருக்கும் நிபந்தனை
ஜாமீனும் அதன்
கட்டளைகளும் நீதி தேவதையின் நேர்மைமிக்க தீர்ப்பு.
அரசியல் விருப்பு வெறுப்பின்றி உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை
ஊன்றிக் கவனிப்போர் ‘இந்தியா நீதி முறைமையில் நேர்கொண்ட துணிவோடு நிமிர்ந்து நிற்கின்றது’
என்று பெருமை கொள்கின்றார்கள்.
பெங்களூரூ சிறப்பு நீதிமன்றம் வழங்கி இருக்கும் தீர்ப்பை
உச்சநீதிமன்றம் ரத்து செய்யவில்லை; நிபந்தனையோடு இடைக்காலத்துக்கு, அதாவது இரண்டு மாத காலத்துக்கு
ஒத்தி வைத்திருக்கிறது.
இந்த இடைக்ககால ஜாமீன் தீர்ப்பின் சாரம்சம்சங்கள் சுருக்கமாக:
- வரும் 18.12.2014 க்குள் இந்த வழக்குத் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் (அவை 30,000, 40,000 பக்கங்களாக இருப்பினும்) கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேடம் ஜே அவர்களின் தரப்பு சமர்ப்பித்தாக வேண்டும்.
- எந்தக் காரணத்தையாவது காட்டி அதற்கு ஒருநாள் தாமதம் செய்தாலும் அதை இந்த உச்ச நீதி மன்றம் ஏற்காது. ஜாமீனை அன்றே ரத்து செய்யும்.
·
கர்நாடக உயர் நீதி மன்றத்தில் நடைபெறவிருக்கும் மேல்
முறையீட்டு
வழக்க்கைத் தாமதமின்றை நடத்தி முடிக்க ஜாமீன்
மனுதாரர் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும்.
கர்நாடக உயர்
நீதி மன்றம் இந்த மேல் முறையீட்டு வழக்கை மூன்று
மாதத்துக்குள் நடத்தி
தீர்ப்பு வழங்க வேண்டும்.
- இனி,நீதித் துறையை அவமதிக்கும் வகையில் நீதிபதி மைக்கேல் குன்ஹா மற்றும் உயர்நீதி மன்ற நீதி அரசர் சந்திரசேகரா ஆகியோருக்கு எதிராகக் காட்டு மிராண்டித்தனமாக விமர்சனங்கள் எழுப்பப் பட்டாலும் சுவரொட்டிகள் வைக்கப்பட்டாலோ ஜாமீனை ரத்து செய்வதற்கான ஆதாரமாக உச்ச நீதிமன்றம் கருதும்.
- இனியும் அதுபோன்ற நிகழ்வுகள் இருக்காதென மேடம் ஜெ. அவர்களின் உத்திவாதத்துடன் அவரது வழக்கறிஞர் ஃபாலி நாரிமன் உறுதி அளித்துள்ளதை ஃபாலி நரிமன் அவர்களின் தனிப்பட்ட உயர்மதிப்பின் அடிப்படையில் மட்டுமே ஏற்று. இந்த ஜாமீன் வழங்கப் படுகிறது.
- இந்த ஜாமீன் மனுவை எதிர்த்து வாதிட்ட சுப்பிரமணியம் சுவாமியை எவராவது அவமானப்படுத்த முயன்றாலோ,அச்சுறுத்தினாலோ தாக்கினாலோ சுப்பிரமணியம் சுவாமி இது குறித்து மனு அளித்தால் அன்றைக்கே ஜாமீனை ரத்து செய்ய இந்த உச்ச நீதி மன்றம் தயங்காது.
இன்னொரு முக்கிய அம்சத்தையும் நாம் கவனிக்க வேண்டும். குறிப்பாக,
மேடம் ஜெ. அவர்களும் அவரது கட்சியினரும்.
இன்று (17.10.2014) உச்ச நீதிமன்றத்தில் ’மேடம் ஜெ. அவர்களுக்கு
ஜாமீன் வழங்கக் கூடாது’ என எதிர்மனுதாரராக வாதிட்டவர் டாக்டர் சுப்பிரமணியம் சுவாமி.
அவரது வாதத்தை உச்ச நீதி மன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை என்ற
போதும் சுவாமி அவர்களின் வாதத்தின் மையக் கருத்தின் அடிப்படையிலேயே இடைக்கால ஜாமீனின் நிபந்தனைகளாக விதித்துள்ளது என்பதைப்
புரிந்து கொள்ள வேண்டும்.
இதன் மூலம் ஜெ. அவர்களின் ஜாமீனுக்காக வாதிட்ட மூத வழக்கறிஞர்
ஃபாலி நாரிமன் அவர்களுக்கு உச்ச நீதி மன்றம் தந்திருக்கும் அதே உயர் மரியாதையை டாக்டர்
சுப்பிரமண்யம் சுவாமி அவர்களுக்கும் தந்திருக்கிறது.
அதாவது ஜாமீனில் வெளியில் இருக்கும் கால அவகாசத்துக்குள்
(18.10.2014) மேல் முறையீட்டுக்கான அனைத்து ஆவணங்களையும் உயர் நீதி மன்றத்தில் அளிக்க
வேண்டும்; அந்த வழக்கு இடைவெளியின்றி விவாதிக்கப்பட்டு மூன்று மாதத்துக்குள் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் வகையில் ஜெ.தரப்பு
முழு ஒத்துழைப்புத் தர வேண்டும். இதில் சுப்பிரமணிய சுவாமி அவர்களின் பாதுகாப்புக்கும்
முழு உத்தரவாதம் தரப்பட வேண்டும்.
அவருக்கு அச்சுறுத்தலோ மிரட்டலோ, அவமானம் தரும்வகையிலான எந்தச்
செயல்களோ நிகழ்த்தப்படுமானால் அது சுவாமி, உச்சநீதி மன்றத்தில் மனு அளிக்கும் பட்சத்தில்
ஜாமீனை ரத்து செய்யத் தயங்க மாட்டோம். இதன் மூலம் அருவறுக்கத்தக்க ஆர்ப்பாட்டங்கள்
மூலமோ தாக்குதல்கள் மூலமோ சுப்பிரமண்யம் சுவாமியை
எவரும் தாக்க முடியாது. இதையும் மீறி சுவாமியைத் தாக்க முயல்வோர் உண்மையில் மேடம் ஜே
அவர்களின் விசுவாசிகளாக இருக்க முடியாது. அவரை உண்மையிலே சிக்கலில் வைக்க விரும்பும்
சதிகாரர்களின் கைப்பாவைகளாகவே இருக்க முடியும்.
இவற்றை மேடம் ஜெ. அவர்கள் மிகுந்த எச்சரிக்கையோடு கவனத்தில்
கொண்டு, நேர்மையான
பார்வையோடு சிந்தித்து, சட்டம் வழங்கி இருக்கும் தார்மீக உரிமையைப் பயன் படுத்தி,
சிறப்பு நீதி மன்றம் வழங்கி இருக்கும் குற்றத் தண்டனையில் இருந்து விடுவித்துக் கொள்ளத் முயல்வதற்குத் தடை ஏதும் இல்லை.
ஆனால்,ஜாமீனில் வெளிவந்திருப்பதைக் காட்டி ’ஜெ.குற்றவாளியே
இல்லை’ என்பதாகக் குதூகலித்துக் கொண்டு அவரது கட்சியினர் ஆரவாரிப்பதும் போஸ்டர்கள்
போடுவதும் பிரச்சாரம் செய்வதும் ரசிக்கத் தக்கதாக இல்லை
.
மிகவும் அமைதியாகவும் எச்சரிக்கையாகவும் மேடம் அவர்களின்
ஜாமீன் வாய்ப்பைக் கட்சியினர் கொண்டாடுவதே
கவுரமானது.
மேடம் ஜெ. அவர்களின் வழக்கு ஆளும் கட்சிக்கும் எதிர்கட்சிகளுக்கும்
மற்றும் அவருடைய எதிர் விமர்சிகர்களுக்கும் இடையிலான அரசியல் போர் அல்ல.
நீதிமன்றம்
கையில் எடுத்திருக்கும் வழக்கு
நீதித்துறை வகுத்துத் தந்திருக்கும் சட்ட நெறிகளின் வழியேதான்
அதனை எதிர் கொண்டு வாதிட வேண்டும் என்ற ஞானம் கட்சித் தொண்டர்களுக்கு இல்லாது போகலாம்;
ஆனால்,இந்த வழக்கை நடத்தும் வக்கீல்களுக்குமா அது இல்லாது போகும்?
இவண்-
கிருஷ்ணன்பாலா
17.10.2014